Wednesday, 24 April 2013

நாம் திறப்பிலே நிற்போம்... சுவரை அடைப்போம்!

சமீபத்தில், இந்தியாவின் தலைநகரத்தில் ஒரு ஐந்து வயது சிறுமிக்கு நடந்தேறிய கொடுமையை நாம் அனைவரும் வாசித்திருப்போம்,  நம்மில் அநேகருடைய நெஞ்சு கொதித்திருக்கும்.....நம்முடைய பிள்ளைகளுக்கு  உண்மையாகவே பாதுகாப்பு   இருக்கிறதா? நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக இத்தகைய சம்பவங்கள் நாடெங்கும் அதிகரித்துக்கொண்டிருக்கிறதே? கடுமையான சட்டங்கள், தண்டனைகள் அவசியம்தான் என்றாலும்....??!!

அரசாளுபவர்களும் , காவல்துறையினரும் அவர்கள் பணியை  அவர்கள் நிறைவேற்றட்டும்.....சத்தியத்தை
அறிந்த, சத்திய  பின்பற்றுகிற  நாம் நமது கடமையை நிறைவேற்றுவோம்......தேசத்தில் நடந்துகொண்டிருக்கும் அக்கிரமத்தின்
நிமித்தம்.....நாம் திறப்பிலே   நிற்போம்...  சுவரை அடைப்போம்


 கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்.
(எசேக்கியேல் 9:4 )

http://lite.epaper.timesofindia.com/mobile.aspx?article=yes&pageid=3&edlabel=TOICH&mydateHid=20-04-2013&pubname=&edname=&articleid=Ar00300&format=&publabel=TOI